Sun Life Care, financial services advisor, life coach therapist, financial consultant, personal loans, business loans, health insurance, life insurance, mutual funds, real estate tips, credit cards, investment planning, finance, wealth management, insurance agent, 2026 finance trends, financial guide, money tips, how to invest
Friday, October 24, 2025
Saturday, October 18, 2025
Friday, October 17, 2025
Shopify Affiliate Program
Wednesday, October 15, 2025
Monday, October 13, 2025
Friday, October 10, 2025
மணவாழ்வில் மகிழ்ச்சி மலர வேண்டுமா? பகுதி 6
சொந்தங்களோடு சமாதானமாக இருப்பது எப்படி?
பகுதி 6
“கரிசனையையும் . . . மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் நீடிய பொறுமையையும் காட்டுங்கள்.”
கல்யாணத்திற்கு பின் நீங்களும் உங்கள்
துணையும் தனி குடும்பமாக ஆகிவிடுகிறீர்கள். பெற்றோர்மீது உங்களுக்கு இருக்கும்
அன்பும் மதிப்பும் குறையப்போவதில்லை. இருந்தாலும் துணைதான் இனி உங்கள் உலகம்! இந்த
உண்மையை ஏற்றுக்கொள்வது உங்கள் பெற்றோருக்குச் சிலசமயம் கஷ்டமாக இருக்கலாம். ஆனால்,
சன் லைப் கேர் ஆலோசனைகளின்படி நடந்தால் அவர்களோடும் சமாதானமாக
இருக்க முடியும், உங்கள்
துணையையும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும்.
1 பெற்றோருக்கு மதிப்பு கொடுங்கள்
“உன் தகப்பனுக்கும் உன் தாய்க்கும் மதிப்புக் கொடு.” உங்களுக்கு எவ்வளவு வயதானாலும் சரி உங்கள் அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுங்கள்; அவர்களை எப்போதும் அன்பாகக் கவனித்துக்கொள்ளுங்கள். உங்கள் துணைக்கும், தன் பெற்றோரைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். “அன்பு பொறாமைப்படாது”. அதனால், உங்கள் கணவர் (அல்லது மனைவி) தன் அப்பா அம்மாவிடம் பாசம் காட்டுவதைப் பார்த்துப் பொறாமைப்படாதீர்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
“உங்க அப்பா அம்மா எப்போ பாத்தாலும் என்னை மட்டம் தட்டிக்கிட்டே
இருக்காங்க” அல்லது “உங்க அம்மா எதுக்கெடுத்தாலும் என்னை குறை சொல்லிட்டே
இருக்காங்க” என்றெல்லாம் சொல்லாதீர்கள்.
உங்கள் கணவரை (அல்லது மனைவியை)
புரிந்துகொள்ளுங்கள். அவருடைய இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள்.
2 கனிவாக, அதேசமயத்தில்
உறுதியாக இருங்கள்
“புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும்
விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” உங்களுக்குக்
கல்யாணமான பிறகும் உங்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இன்னும்
இருப்பதாக பெற்றோர் நினைக்கலாம். அதனால், உங்கள் குடும்ப
விஷயங்களில் அவர்கள் அளவுக்குமீறி தலையிடலாம்.
அவர்கள் எந்தளவு தலையிடலாம் என்பதைப்
பற்றி நீங்கள் இருவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதைப் பற்றி அவர்களிடம் அன்பாக,
கனிவாகப் பேசுங்கள்; அதேசமயம் உள்ளதை உள்ளபடி
சொல்லுங்கள். மனத்தாழ்மையோடும் பொறுமையோடும் நடந்துகொண்டால் உங்கள் சொந்தங்களோடு
சமாதானமாக இருக்கலாம். ‘அன்பினால் ஒருவரையொருவர்
பொறுத்துக்கொள்ளலாம்.’
நீங்கள் என்ன செய்யலாம்?
சொந்தங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிகமாக
தலையிட்டால், பொருத்தமான சமயத்தில் அதைப் பற்றி
உங்கள் கணவரிடம் (அல்லது மனைவியிடம்) பேசுங்கள்.
அதை எப்படிச் சரிசெய்யலாம் என்று இருவரும்
பேசி முடிவெடுங்கள்.
பெற்றோரைப் புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் அப்பா அம்மாவுடைய உணர்ச்சிகளைப்
புரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். அவர்கள் எந்தக் கெட்ட எண்ணத்தோடும் உங்கள்
குடும்ப விஷயங்களில் தலையிடுவது கிடையாது; உங்கள்
மீதுள்ள அக்கறையால்தான் அப்படிச் செய்கிறார்கள். உங்களை ஒரு தனி குடும்பமாகப்
பிரித்துப் பார்ப்பது அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம்; அவர்களை
நீங்கள் ஒதுக்கிவிட்டதாக நினைக்கலாம். ஆனால், நீங்கள் சன்
லைப் கேர் ஆலோசனைகளின்படி நடந்தால்... பெற்றோரிடம் வெளிப்படையாகப்
பேசினால்... அவர்களுக்கு மதிப்பு காட்ட முடியும், உங்கள்
திருமண பந்தத்தையும் பலப்படுத்த முடியும்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...
என் கணவருடைய (அல்லது மனைவியுடைய)
பெற்றோர் எங்கள் குடும்ப விஷயங்களில் தலையிடுவது ஏன் சகஜம்?
என் கணவருக்கு (அல்லது மனைவிக்கு)
முதலிடம் கொடுக்கும் அதேசமயத்தில் என் பெற்றோருக்கும் எப்படி மதிப்பு காட்டலாம்?
Please Support
மணவாழ்வில் மகிழ்ச்சி மலர வேண்டுமா? பகுதி 5
வரவுசெலவை சமாளிப்பது எப்படி?
பகுதி 5
“நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால்
வெற்றி பெறுவாய்.”
குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள பணம்
நமக்கு முக்கியம்.
“பணம் பாதுகாப்பு தரும்”
கணவன் மனைவியாகச் சேர்ந்து பண விஷயங்களைப்
பற்றி பேசும்போது சில சமயம் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம்.
இருந்தாலும்,
பணப்பிரச்சினை உங்கள் வாழ்க்கையில் பெரிய விரிசலை ஏற்படுத்தாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்.
பணத்தை எப்படிச் செலவிடலாம் என்பதைப்
பற்றி இருவரும் சேர்ந்து முடிவெடுங்கள், ஒருவரையொருவர்
நம்புங்கள்.
1 நன்கு திட்டமிடுங்கள்
“உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட
விரும்பினால், அதைக் கட்டி முடிக்கப் போதுமான வசதி தனக்கு
இருக்கிறதா என்று முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டுப் பார்க்காமல் இருப்பானா?”
வரவுசெலவைப் பற்றி இருவரும் கலந்துபேசி திட்டமிடுவது ரொம்பவே
முக்கியம். என்ன வாங்க போகிறீர்கள், அதற்கு எவ்வளவு
செலவாகும் என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். பணம் இருப்பதால் நீங்கள்
ஆசைப்பட்டதையெல்லாம் வாங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். கடன் வாங்குவதைத்
தவிர்த்துவிடுங்கள். வரவுக்கேற்ற செலவு செய்யுங்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
மாதக் கடைசியில் உங்களிடம் பணம் மிச்சம்
இருந்தால் அதை என்ன செய்வதென இருவராகத் தீர்மானியுங்கள்
பண நெருக்கடி ஏற்பட்டால்,
உங்கள் செலவுகளை எப்படிக் குறைக்கலாம் என்று திட்டமிடுங்கள்.
உதாரணத்திற்கு, அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவதைக்
குறைத்துக்கொள்ளுங்கள்
2 நேர்மையாக இருங்கள், வெளிப்படையாகப் பேசுங்கள்
மனிதர்களுடைய பார்வையில் நேர்மையாக இருங்கள்.’ நீங்கள் எவ்வளவு
சம்பாதிக்கிறீர்கள், எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை
உங்கள் கணவரிடம் அல்லது மனைவியிடம் மூடிமறைக்காமல் சொல்லுங்கள்.
ஒரு பெரிய செலவு செய்ய வேண்டியிருந்தால்
அதைப் பற்றி நீங்கள் இருவரும் முதலில் கலந்துபேசுங்கள். நீங்கள் சம்பாதிக்கும்
பணத்தை,
உங்களுடைய பணமாகப் பார்க்காமல் குடும்பத்துடைய பணமாகப் பாருங்கள். பண
விஷயத்தைப் பற்றி எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசும்போது, நீங்கள் இருவரும் சந்தோஷமாகவும் சமாதானமாகவும் இருக்கலாம்.
நீங்கள் என்ன செய்யலாம்?
கைசெலவுக்கு நீங்கள் இருவரும் தனித்தனியாக
எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம் என்று முன்னதாகவே முடிவு செய்யுங்கள்
பண விஷயத்தில் பிரச்சினை வரும்வரை
காத்திருக்காதீர்கள், அதைப் பற்றி முன்னதாகவே
பேசுங்கள்
பணம் எவ்வளவு முக்கியம்?
பணம் முக்கியம்தான்,
ஆனால் பணத்தை நினைத்து அநாவசியமாகக் கவலைப்படாதீர்கள், அதனால் உங்களுக்குள் பிரச்சினைகள் வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கைநிறைய
பணம் இருந்தால்தான் சந்தோஷமாக வாழ முடியும் என்று நினைப்பது தவறு. “எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. கோடி ரூபாய் கொடுத்தாலும் சந்தோஷமான திருமண
வாழ்க்கையை விலைக்கு வாங்க முடியாது. அதனால், கொஞ்ச பணம் இருந்தாலும்
அதை வைத்துத் திருப்தியாக வாழுங்கள். கடவுளை முழுமையாக நம்புங்கள். அப்போது,
உங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், யெகோவாவுடைய
ஆசீர்வாதமும் கிடைக்கும்.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...
கடனில்லாமல் வாழ நாங்கள் குடும்பமாக என்ன
செய்ய வேண்டும்?
பண விஷயத்தைப் பற்றி நாங்கள் இருவரும்
கடைசியாக,
எப்போது வெளிப்படையாகப் பேசினோம்?
மணவாழ்வில் மகிழ்ச்சி மலர வேண்டுமா? பகுதி 4
பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி?
பகுதி 4
“ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்; ஏனென்றால், அன்பு திரளான பாவங்களை மூடும்.”
கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வரலாம்.
நீங்கள் இருவரும் வித்தியாசமாக யோசிப்பதும் செயல்படுவதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
சில சமயம், நண்பர்களிடமிருந்தும் உறவினரிடமிருந்தும் பிரச்சினைகள் வரலாம்.
எதிர்பாராத சம்பவங்களும் பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம்.
உங்கள் திருமண வாழ்க்கையைப் பல கனவுகளோடு ஆரம்பித்திருப்பீர்கள்.
அதனால், பிரச்சினைகள் வரும்போது சோர்ந்துவிடாதீர்கள்.
அவற்றைச் சரிசெய்ய முயற்சி செய்தால் எந்தப் பிரச்சினையையும் உங்களால் நிச்சயம் சமாளிக்க முடியும்.
1 கலந்து பேசுங்கள்
‘பேசுவதற்கு ஒரு காலமுண்டு.’
பிரச்சினைகளைப் பற்றி பேச நேரம் ஒதுக்குங்கள்.
அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், எப்படி உணருகிறீர்கள் என்பதை உங்கள் கணவரிடமோ மனைவியிடமோ வெளிப்படையாகச் சொல்லுங்கள்.
எப்போதும் ‘உண்மையே பேசுங்கள்.’
கோபம் தலைக்கேறினாலும் சண்டை போடாதீர்கள், அமைதியாகப் பேசுங்கள்.
அப்போது, எந்தவொரு பிரச்சினையும் பூகம்பமாக வெடிக்காது.
கணவரின் (அல்லது மனைவியின்) கருத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அவரிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள்.
அவருக்கு அன்பும் மரியாதையும் காட்டுங்கள்.
பிரச்சினைகளை உடனுக்குடன் சரிசெய்யுங்கள். பேசாமல் இருந்துவிடாதீர்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
பிரச்சினைகளைப் பற்றி எந்தச் சமயத்தில் பேசினால் சரியாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்
உங்கள் கணவரோ மனைவியோ பேசும்போது குறுக்கிடாதீர்கள், கவனமாகக் கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் பேசுங்கள்.
2 காதுகொடுத்துக் கேளுங்கள், புரிந்துகொள்ளுங்கள்
‘ஒருவருக்கொருவர் கனிவான பாசத்தை காட்டுங்கள்; ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பதில் முந்திக்கொள்ளுங்கள்.’
கணவனோ மனைவியோ பேசும்போது காதுகொடுத்துக் கேட்பது ரொம்ப முக்கியம்.
அவர் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போது, ‘அனுதாபத்தோடும் . . . மனத்தாழ்மையோடும்’ நடந்துகொள்ளுங்கள்.
கவனித்துக் கேட்பதுபோல் காட்டிக்கொள்ளாதீர்கள்.
முடிந்தால் நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையை ஓரங்கட்டிவிட்டு அவர் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.
இல்லையென்றால் இதைப் பற்றி பிறகு பேசலாமா என்று அன்பாகக் கேளுங்கள்.
உங்கள் துணையை எதிரியாகப் பார்க்காமல் நண்பராகப் பார்த்தால் ‘சீக்கிரமாய்க் கோபமடைய’ மாட்டீர்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்?
கணவர் (அல்லது மனைவி) சொல்வது உங்களுக்கு எரிச்சலாக இருந்தாலும் பொறுமையாகக் கேளுங்கள். முழு விவரத்தையும் கேட்பதற்கு முன் எந்த முடிவிற்கும் வராதீர்கள்
அவர் சொல்வதை மட்டுமல்லாமல் அவருடைய மனதில் இருப்பதையும் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் துணையின் முகபாவனை, பேசும் தொனி, சைகை ஆகியவற்றைக் கவனியுங்கள்
3 சொன்னதைச் செய்யுங்கள்
“கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.”
ஒரு பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்று நீங்கள் இருவரும் சேர்ந்து முடிவெடுத்தால் மட்டும் போதாது, அதன்படி செய்வதும் முக்கியம்.
இதற்குக் கடின முயற்சி தேவை.
நீங்கள் இருவரும் சேர்ந்து முயற்சி செய்தால் ‘நல்ல பலன்’ கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!
நீங்கள் என்ன செய்யலாம்?
‘பிரச்சினையைத் தீர்க்க நான் என்ன செய்யலாம்’ என்று யோசித்து முடிவெடுங்கள்
முடிவெடுத்தபடி செய்கிறீர்களா என்று அடிக்கடி பார்த்துக்கொள்ளுங்கள்
இருவராகப் பிரச்சினைகளைச் சமாளியுங்கள்
திருமண வாழ்வில் தென்றல் வீசுவதும் புயல் அடிப்பதும் உங்கள் இருவர் கையில்தான் இருக்கிறது.
நடந்து முடிந்த கசப்பான விஷயங்களையே கிளறிக்கொண்டிருக்காமல் நடக்கப்போகிற விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்.
இருவரும் சேர்ந்து செயல்பட்டால். எந்தவொரு பிரச்சினையையும் உங்களால் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும்!
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்...
என் கணவரோடு (அல்லது மனைவியோடு) கலந்துபேச வேண்டிய மிக முக்கியமான பிரச்சினை எது?
ஒரு பிரச்சினையைப் பற்றி என் கணவர் (அல்லது மனைவி) எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
























